நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒருவர் பலி.. பலர் மாயம்

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒருவர் சிக்கி உயிரிழந்துள்ளார். பலர் மாயமாகியுள்ளனர்.

காத்மண்டு,

நேபாள நாட்டில் உள்ள மேலம்ஷி மற்றும் இந்திரவதி ஆறுகளில் இன்று திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பக்மதி மாகாணத்தில் உள்ள சிந்துபல்சவுக் மாவட்டம் உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில் நதி நீர் புகுந்தன.

நேற்று பெய்த கனமழை காரணமாக இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்த வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் சிந்துபல்சவுக் மாவட்ட அதிகாரி தெரிவித்தார். மீட்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Translate »
error: Content is protected !!