பெரியகுளம் சட்டமன்ற திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு.. பட்டாசுகள் வெடித்து சால்வை அணிவித்து அமோக வரவேற்பு..!

பெரியகுளம் சட்டமன்ற திமுக வேட்பாளர் கே.எஸ் சரவணகுமார் பெரியகுளம் ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு.. பட்டாசுகள் வெடித்து சால்வை அணிவித்து அமோக வரவேற்பு..

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற திமுக வேட்பாளர் கே.எஸ் சரவணகுமார்.. பெரியகுளம் ஒன்றிய பகுதிகளான லட்சுமிபுரம் கழுத்துப்பட்டி காமக்காபட்டி ஜல்லிபட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தால்.,

பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு ஐந்து ரூபாய் குறைப்பதாகவும் அதேபோல் மாணவர்கள் பெற்றுள்ள கல்விக்கடனை ரத்து செய்வதாகவும், விவசாய கடன் ரத்து செய்வோம், பெண்களுக்கான மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை பணம் கொடுப்போம் என உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்..

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் திமுக ஒன்றிய செயலாளர் எல்.எம். பாண்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் நாகரத்தினம் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டனர்..

Translate »
error: Content is protected !!