பெரியாரின் 47 வது நினைவு தினத்தை ஒட்டி திக, திமுக உட்பட பல்வேறு கட்சியினர் உருவச் சிலைக்கு மாலை அணி வருகின்றனர்

47 வது நினைவு தினத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் பெரியாரின் உருவச் சிலைக்கு திக, திமுக உட்பட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்தும், அவருடைய  படத்திற்கு மலர் மரியாதை  செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சியில் திமுகவின் மத்திய மாவட்ட பொறுப்பாளர்  வைரமணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்  ஸ்டாலின்குமார், முன்னாள் துணை மேயர் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில்  பெரியசாமி சேர்மன் துரைராஜ்  உள்பட பலர் கலந்து கொண்டனர்

Translate »
error: Content is protected !!