மத்தியப் பிரதேசம்: பிந்த் மாவட்டச் சிறையில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் 22 கைதிகள் காயம்

மத்திய பிரதேசத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழமையான சிறை ஒன்று உள்ளது.

இந்த நிலையில், அந்த பழமை வாய்ந்த சிறையில் சுவர் இடிந்து, சிறையின் ஒரு பகுதி முழுவதுமாக சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் 22 கைதிகள் காயம் அடைந்துள்ளனர்.

மேலும் காயமடைந்த 22 கைதிகள் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். எனினும், உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்று காவல் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் சிங் கூறினார்.

Translate »
error: Content is protected !!