மீண்டும் அரசியலில் மு.க.அழகிரி? வரும் 20ம் தேதி ஆலோசனை!

திமுகவில் இருந்தும், அரசியலில் இருந்தும் ஒதுங்கி இருக்கும் மு.க. அழகிரி, வரும் 20-ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, அவரது மகன் மு.க. அழகிரி, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவர் மீண்டும் அரசியலில் ஈடுபட உள்ளதாக செய்திகள் பரவின.

இந்த நிலையில், மதுரையில் வரும் நவம்பர் 20ம் தேதி தனது ஆதரவாளர்களை மு.க. அழகிரி சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதில், தனிக்கட்சி தொடங்குவது பற்றி அவர் விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அவரது கட்சியின் பெயர் ‘கலைஞர் திமுக’ என்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அழகிரி ஆலோசனை நடத்தும் நாளில்தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னைக்கு வருகிறார். அவரை அழகிரி சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களை சந்திப்பது, அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது.

Translate »
error: Content is protected !!