விவசாயிகள் போராட்டத்தில் ஊடுருவிய பிரிவினைவாத சக்திகளை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது என்.ஐ.ஏ

விவசாயிகள் போராட்டத்தில் ஊடுருவிய அந்நிய சக்திகள் மற்றும் பிரிவினை வாத சக்திகள் மீதான வேட்டையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

தலைமறைவாக உள்ள காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தின் ஆதரவாளர் அமர்ஜித்சிங் மற்றும் நடிகர் தீப் சித்து ஆகியோரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிரிவினைவாத பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய அமர்ஜித் சிங்கை தேடி பல்வேறு இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

டெல்லியில் நடைபெற்ற வன்முறைகளில் இவருக்குத் தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது. அமர்ஜித்தின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு மின்னணு சாதனங்கள் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Translate »
error: Content is protected !!