அசாமில் 7 மாவட்டங்களில் ஜூலை 7 முதல் ஊரடங்கு அறிவிப்பு

அசாமில், கடந்த 24 மணி நேரத்தில் 2,640 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மேலும் அறிவிப்பு வரும் வரை 7 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோல்பாரா, கோலகட், ஜோர்ஹட், லக்கிம்பூர், சோனித்பூர் மற்றும் பிஸ்வநாத் மோரிகேலன் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 7 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும், மேலும் ஊரடங்கு உத்தரவின் போது அனைத்து வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் உணவகங்களையும் மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தனியார் மற்றும் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!