அமெரிக்கா அலபாமா நெடுஞ்சாலையில் 15 வாகனங்கள் மோதல்.. 9 குழந்தைகள் பலி

அலபாமா நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 15 வாகன மோதிய விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் கிளாடிட் புயல் பாதிப்பினால் தென்கிழக்கு பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக கைவிடப்பட்டவர்களுக்கு  அடைக்கலம் அளிக்கும் காப்பக நபர்களை சுமந்து கொண்டு பேருந்து ஒன்று சென்றுள்ளது.

பஸ் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென  15 வாகனங்கள் தொடர்ச்சியாக மோதின. இந்த சம்பவத்தில் பேருந்தில் இருந்த 8 குழந்தைகள் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் 4 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள்.

மற்றொரு வாகனத்தில் இருந்த 29 வயது நபர் மற்றும் அவரது 9 மாத கைக்குழந்தை ஆகியோரும் உயிரிழந்து உள்ளனர்இதனால் விபத்தில் மொத்தம் 10 பேர் பலியாகி உள்ளனர். மற்றொரு வாகனத்தில் இருந்த 29 வயது இளைஞரும் அவரது 9 மாத குழந்தையும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!