புயல் காரணமாக மும்பையில் நாளை கொரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் ரத்து

அரபிக் கடலில் உருவாகியுள்ள புயலின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பையில் நாளை கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அங்கு நாளை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பையில் நாளை கொரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. புயல் முன்னெச்சரிக்கையாக கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளில் தேவையான ஏற்பாடுகளைச் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Translate »
error: Content is protected !!