இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 12 ஆயிரத்தி 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 12 ஆயிரத்தி 143பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு சீராக குறைந்து வருகிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 143- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 11,395- பேர் குணம் அடைந்துள்ளனர். ஒரே நாளில் 103- பேர் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர்

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 08 லட்சத்து 92 ஆயிரத்து 746- ஆக உள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 06 லட்சத்து 625 ஆக உள்ளது.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 550- ஆக உள்ளது. தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 571- ஆக உள்ளதுநாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 79 லட்சத்து 67 ஆயிரத்து 647- ஆக உள்ளது

 

Translate »
error: Content is protected !!