இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 9 ஆயிரத்தி 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு சீராக குறைந்து வருகிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது

அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,121 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 11,805 பேர் குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 81 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,09,25,710 ஆக உள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1,06,33,025 ஆக உள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,55,813 ஆக உள்ளது.

நாடு முழுவதும் தற்போது 1,36,872 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 87,20,822 கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்

 

Translate »
error: Content is protected !!