இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 38,792 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 38,792 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடி 9 லட்சம் 46 ஆயிரம் 074 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 41,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 3 கோடி 01 லட்சம் 04 ஆயிரம் 720 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு 4 லட்சம் 29 ஆயிரம் 946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 624 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு, இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 11 ஆயிரம் 408 ஆக உயர்ந்துள்ளதுஇந்தியாவில் இதுவரை தடுப்பூசி போடப்பட்ட எண்ணிக்கை 38 கோடி 76 லட்சத்து 97 ஆயிரம் 935 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!