இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 38,949 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 38,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோட லட்சம் 26 ஆயிரம் 829 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 40,026 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 3 கோடி 01 லட்சம் 83 ஆயிரம் 876 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு 4 லட்சம் 30 ஆயிரம் 422 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 542 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 12 ஆயிரம் 531 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் இதுவரை தடுப்பூசி போடப்பட்ட எண்ணிக்கை 39 கோடி 53 லட்சத்து 053 ஆயிரம் 767ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!