இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 62,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 62,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

புதுடெல்லி,

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 62 ஆயிரம் 224 பேரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, 1 லட்சம் 07 ஆயிரம் 628 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் தற்போது 8,65,432 பேர் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28,00,458 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 26 கோடி 19 லட்சம் 72 ஆயிரம் 014 ஆக உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 19,30,987 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.,மொத்தம் 38,33,06,971 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!