இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார வெளியிட்ட அறிக்கையில்,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,99,77,861 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்றில் இருந்து ஒரே நாளில் 81,839 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை2,89,26,038 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால்  ,62,521 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை நாடு முழுவதும் 28 கோடி 87 லட்சம் 66 ஆயிரம் 201 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!