இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51,667 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51,667 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,01,34,445 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும், ஒரே நாளில் 1,329 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.இதனால் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கையை 3,93,310 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுநோயிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 2,91,28,267 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 64,527 பேர் குணமடைந்துள்ளனர்.. நாடு முழுவதும் 6,12,868 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் 30,79,48,744 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.

 

 

Translate »
error: Content is protected !!