இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 57,477 பேர் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். மேலும் 738 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 3 கோடி 05 லட்சம் 02 ஆயிரம் 362 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2 கோடி 96 லட்சம் 05 ஆயிரம் 779 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தொற்றுநோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்களின்  எண்ணிக்கை 4 லட்சம் 95 ஆயிரம் 533 ஆக குறைந்துள்ளது. நோய் தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சம் 01 ஆயிரம் 050 ஆக அதிகரித்து வருகிறது. நாட்டில் இதுவரை தடுப்பூசி போடப்பட்ட எண்ணிக்கை 34 கோடி 46 லட்சம் 11 ஆயிரம் 291 ஆக அதிகரித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!