இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை நீட்டிப்பு..!

இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக சர்வதேச விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து படிப்படியாக உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. அதை தொடர்ந்து சர்வதேச பயணிகளுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சர்வதேச விமானங்களுக்கான தடை மே 31 –ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அதிகாரிகளால் ஒப்புதல் வழங்கப்பட்டு இயக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!