இந்தியாவில் புதிதாக 48,698 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியாவில் கடந்த 24 மணி(காலை 8 மணியுடன்) நேரத்தில் புதிதாக 48,698 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  3 கோடி 1 லட்சம் 83 ஆயிரம் 143 ஆக அதிகரித்துள்ளது.

48 ஆயிரம் 698 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் குணமடைந்தவர்களின் என்னைக்கு 64 ஆயிரம் 818 ஆக அதிகரித்துள்ளதுநாடு முழுவதும் இதுவரை 2 கோடி 91 லட்சம் 93 ஆயிரம் 085 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். கொரோனாவின் இறப்பு எண்ணிக்கை நேற்றுடன் ஒப்பிடும்போது இன்று சற்று குறைவாக உள்ளது. கொரோனா தொற்று காரணமாக 1,183 பேர் இறந்தனர்.

கொரோனா மீட்பு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் தொடர்ந்து குறைந்து வருகிறது. காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 5 லட்சம் 95 ஆயிரம் 565 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!