இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,15,736 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி… இதுவரை 8.70 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது..

புதுடெல்லி:

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு  எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,28,01,785 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,15,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 630 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,66,177 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,17,92,135 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 59,856 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில்  8,43,473  பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 8,70,77,474 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!