இந்தியாவில் 8 வது நாளாக கொரோனா பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழ் பதிவு

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. அந்த வகையில் 8வது நாளாக இன்று பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழ் பதிவாகி உள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

கடந்த 75 நாட்களில் இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியே 95 லட்சத்து 70 ஆயிரத்து 881 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்றால் ஒரே நாளில் மேலும் 2,726 பேர் இறந்தனர். மொத்த இறப்பு எண்ணிக்கை 3,77,031 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சம் 17 ஆயிரம் 525 பேர் கொரோனாவில் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடி 82 லட்சம் 80 ஆயிரம் 472 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் தற்போது 9,13,378 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!