உதயநிதி ஸ்டாலினுக்கு திருச்சியில் கும்ப மரியாதையுடன் வரவேற்பு

திருச்சியில் தி.மு.க பிரமுகர்கள் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி வந்தார்.மேல சிந்தாமணி பகுதியில் திருச்சி தி.மு.க தெற்கு மாவட்டம் சார்பில் அவருக்கு கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெண்கள் மலர் தூவி அவரை வரவேற்றனர்.தொடர்ந்து அப்பகுதியில் தி.மு.க வின் கொடியை ஏற்றினார்.அதன் பின்பு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டு சென்றார்.அவருடன் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் சட்ட மன்ற உறுப்பினருமான மகேஷ் பொய்யாமொழி மற்றும் இளைஞரணியினர் உடனிருந்தனர். திருச்சியில் நிகழ்ச்சிகளை முடித்த பின்பு திருக்குவளை செல்லும் உதயநிதி அங்கு தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாக தி.மு.க விற்கு திருச்சி மாவட்டம் திருப்புமுனை ஏற்படுத்தும் மாவட்டம் என கூறுவார்கள்.அந்த வகையில் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையில் தேர்தல் பிரச்சாரத்தை உதயநிதி இன்று தொடங்க உள்ள நிலையில் திருப்புமுனை மாவட்டமான திருச்சியில் அவர் தி.மு.க வின் கொடியை இன்று ஏற்றி வைத்தது திருச்சி மாவட்ட தி.மு.க வினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Translate »
error: Content is protected !!