எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி காரணமாக மாநிலங்களவை காலை 11.30 மணி வரை ஒத்திவைப்பு

கடந்த 29-ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற அவைகளில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 – 22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில் , அதனை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஏற்க மறுத்தார்.

இதனால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி காரணமாக மாநிலங்களவை காலை 10.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 10.30 மணிக்கு மீண்டும் அவை கூடியபோதும் எதிர்கட்சி உறுப்பினர்கள் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்கவும் திரும்பப் பெறவும் வலியுறுத்தி முழுக்கங்களை எழுப்பினர். எனவே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மாநிலங்களவை மீண்டும் காலை 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

 

Translate »
error: Content is protected !!