ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் கால்களை உள்ளங்கைகளால் தாங்கி உள்ளூர் மக்கள் வரவேற்பு

மத்திய பிரதேசத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் கால்களை உள்ளங்கைகளால் தாங்கி உள்ளூர் மக்கள் வரவேற்ற ஆச்சரிய நிகழ்வு நடந்து உள்ளது.

போபால்,

மத்திய பிரதேசத்தில் நீமுச் பகுதியை சேர்ந்தவர் விஜய் சிங்இந்திய ராணுவத்தில் பணியாற்றி நாட்டுக்கு சேவை செய்த இவர் சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார்இதன்பின்னர் தனது சொந்த ஊருக்கு திரும்பினார். அவரது வருகையை உள்ளூர் மக்கள் வித்தியாசமுடன் வரவேற்றது காண்போரை பரவசமடைய செய்துள்ளதுஅந்த பகுதி மக்கள் தங்களது உள்ளங்கைகளை நீட்டி ராணுவ வீரரின் கால்களை தாங்கி வரவேற்றனர்அதன் மீது நடந்து செல்லும்படி அவரை கூறினர்.

அவருக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர்இதனால் உணர்ச்சிவசப்பட்டு பேசிய விஜய் சிங், கடந்த 17 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் நான் சேவையாற்றி வந்துள்ளேன்மக்கள் எனக்கு அளித்த இந்த வரவேற்பு இன்று எனக்கு அதிக பெருமை அளிக்கும் தருணம் ஆகும்தாழ்மையுடன் நான் இதனை ஏற்று கொள்கிறேன் என கூறியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!