ஓ.பி.சி. பிரிவினருக்கு எதிரான தீர்ப்பு.. மேல்முறையீடு செய்ய வேண்டும் – திருமாவளவன் கோரிக்கை

.பி.சி. பிரிவினருக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

மராத்தா வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 16%  இட ஒதுக்கீட்டை, உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசசன அமர்வு இன்று ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இது மாநில உரிமைகளை பறிப்பதாக உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த தீர்ப்பு சமூகநீதிக்கு எதிராகவும், நாடு தழுவிய அளவில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது எனவும் திருமாவளவன் சுட்டிக்காட்டி உள்ளார்.

Translate »
error: Content is protected !!