கார் லாரி நேருக்கு நேர் மோதியதில் குழந்தை உட்பட 10 குடும்ப உறுப்பினர்கள் பலி

குஜராத்தில் இன்று அதிகாலை கார் மீது லாரி மோதியதில் குழந்தை உட்பட 10 குடும்ப உறுப்பினர்கள் பலியானார்கள். 

அகமதாபாத்,

குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் இந்திரநாஜ் கிராமத்திற்கு அருகே புதன்கிழமை காலை எதிர் திசையில் இருந்து வந்த லாரி மீது கார் மோதியதில் 10 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனந்த் மாவட்டத்தில் உள்ள தாராபூரை அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள வட்டமனுடன் இணைக்கும் மாநில நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்ததாக தாராபூர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒரு குழந்தை, இரண்டு பெண்கள், 7 ஆண்கள்  என 10 பேர் பயணித்த கார் வேகமாக வந்த லாரி மீது மோதியது. காரில் இருந்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இதை அறிந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மாவட்ட கலெக்டரிடம் விபத்து குறித்து பேசினார் மேலும்  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உதவி அளிக்கப்படும் என உறுதி அளித்தார்.                   

 

Translate »
error: Content is protected !!