கொரோனா இரண்டு அலைகளால் 1,530 கர்ப்பிணிப் பெண்கள் பாதிப்பு

.சி.எம்.ஆர்  அறிக்கையின் படி, நாட்டில் கொரோனா 2 வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என கூறப்படுகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (.சி.எம்.ஆர்.) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

* நாட்டில் கொரோனா 2 வது அலை கர்ப்பிணிப் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

* இதுவரை 387 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  28.7% பேருக்கு நோய்த்தொற்றின் அறிகுறிகள் சதவீதம் அடிப்படையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

* முதல் அலை காலகட்டத்தில் 1,143 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில், 162 பெண்கள், அல்லது 14.2 சதவீதம் பேர் மட்டுமே அதிக அளவில் நோய் தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

* முதல் அலைகளில் கர்ப்பிணிப் பெண்களின் இறப்பு விகிதம் 0.7 ஆகவும், இரண்டாவது அலையில் இதுவரை 22 இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 5.7 ஆக உயர்ந்துள்ளது.

* இரண்டு அலைகளால் இதுவரை 1,530 கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 30 பேர் இறந்துள்ளதாகவும் .சி.எம்.ஆர். அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Translate »
error: Content is protected !!