கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை – ராஜேஷ் தோபே

மும்பை, கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை என்று மகாராஷ்டிர சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.

கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்களில் யாருக்கும் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படவில்லை. இரண்டு தடுப்பு மருந்துகளுக்கும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

தடுப்பு மருந்தை ஏற்றுக்கொள்வதில் பயனாளிகள் இடையே சற்று குழப்பம் நிலவுகிறது. இரண்டு தடுப்பு மருந்துகள் பற்றியும் எந்த சந்தேகமும் வேண்டாம். அவை முற்றிலும் பாதுகாப்பானவை. பயனாளிகளிடம் உள்ள பயத்தை போக்கும் வகையில் அரசு தேவையான விளக்கத்தை அளிக்கும்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள இருக்கும் சுகாதார பணியாளர்களுக்கு வீடியோ தகவல் அனுப்பப்படும். வாரத்தில் செவ்வாய், புதன், வெள்ளி, சனிக்கிழமை தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என்று கூறி உள்ளார்.

 

Translate »
error: Content is protected !!