சசிகலாவின் அழைப்பு அமமுகவுக்கு தான் பொருந்தும், அதிமுகவுக்கு அல்ல – அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலாவின் அழைப்பு அமமுகவுக்கு தான் பொருந்தும், அதிமுகவுக்கு அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளான 24-ந்தேதி இன்று தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா 73வது பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராயநகர் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சசிகலா பேசியது,

ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். விரைவில் தொண்டர்கள், பொது மக்களையும் சந்திக்க உள்ளேன். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களுக்கு நான் துணை நிற்பேன். தொண்டர்கள் ஒன்றாக இணைந்து மீண்டும் ஆட்சி தொடர வேண்டும் என்பதே விருப்பம் என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் சசிகலாவின் பேச்சு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், சசிகலாவின் அழைப்பு அமமுகவுக்கு தான் பொருந்தும், அதிமுகவுக்கு அல்ல. சசிகலா விடுத்த அழைப்பு அதிமுகவிற்கு பொருந்தாது. சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில்தான் உள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!