சசிகலா ஆதரவாளர்கள் வந்த காரில் திடீரென தீ விபத்து!! அதிர்ச்சி சம்பவம்

கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே போச்சம்பள்ளியில் சசிகலா ஆதரவாளர்கள், பட்டாசு எடுத்து வந்த காரில் திடீரென தீ பற்றியதால், 2 கார்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பெங்களூருவில் இருந்து சசிகலா இன்று காலை சென்னை திரும்பி வந்தார். பெங்களூருவில் அவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் இருந்து காரில் புறப்பட்டார்.

அதேநேரத்தில், தமிழகத்தில் நுழையும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் இருந்து, சசிகலா வாகனத்தை தொடர்ந்து 5 வாகனங்கள் மட்டுமே பின் தொடர வேண்டும். இதர வாகனங்கள் வழியிலேயே நிறுத்தப்படும் என கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் தெரிவித்தார். மேலும் விதிகளை மீறுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே போச்சம்பள்ளியில் சசிகலா ஆதரவாளர்கள் பட்டாசு எடுத்து வந்த காரில் திடீரென தீ பற்றியது. இதனால், 2 கார்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. உடனடியாக வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Translate »
error: Content is protected !!