சூராப்பா மீது 700 கோடி ஊழல் வழக்கு – திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சூராப்பா மீது 700 கோடி ஊழல் வழக்கு உள்ளதுஅவரை ஆரம்பத்தில் வேண்டாம் என்றவர் தலைவர் ஸ்டாலின் –  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை லால்குடி பகுதியில் தன்னுடைய 17வது நாள் பிரச்சாரத்தை தொடங்கி ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திற்கு முன்பாக தன்னுடைய உரையை நிகழ்த்தி பொதுமக்களிடமும் தொண்டர்களிடமும் வாக்குகள் சேகரித்தார் அப்போது அவர் பேசுகையில்

என்னை தொடர்ந்து கைது செய்து திமுகவின் பிரச்சாரத்திற்கு பெரிதும் உதவிய காவல்துறைக்கு என்னுடைய நன்றி. மிகப்பெரிய எழுச்சியை பார்க்கிறேன் சுமார் 2 மணி நேரம் 3 மணி நேரம் மக்கள் எனக்காக காத்து இருக்கிறார்கள் நீங்கள் முடிவு செய்துவிட்டீர்கள் யார் வரவேண்டும் என்று.

இவரிடம் எல்லா கோரிக்கைகளையும் உரிமையாக கேட்கிறார்கள் உங்களுடைய தாத்தா செய்ததும் அடுத்து உங்களுடைய அப்பா செய்யப்போகிறது நீங்கள் உறுதிப்படுத்துங்கள். இந்தியாவில் மூன்றாவது பெரும்பான்மையான கட்சிதாக திமுக உருவாக நாடாளுமன்ற தேர்தலில் தக்க பதிலடி கொடுத்தீர்கள்அது சாதாரண அடி அல்ல. சரியான சம்பட்டி அடி.

னியார் ரயில், விமான சேவைகள் வர போகிறதுதனியாரிடம் தாரை வாத்து கொடுப்பதே பிழைப்பாக கொண்டு உள்ளது நம் மத்திய அரசு. 10 நாளுக்கு ஒரு முறை சிலிண்டர் விலை ஏறி வருகிறதுபுதிய கல்வி கொள்கையால் மூன்றாம்& ஐந்தாம் வகுப்பிற்கு பொது தேர்வு என்றால் அவர்களுக்கு என்ன தெரியும்நம் குழந்தைகள் படிக்க கூடாது என ஆசை படுகிறார்கள்.

சூராப்பா மீது 700 கோடி ஊழல் வழக்கு உள்ளதுஅவரை ஆரம்பத்தில் வேண்டாம் என்றவர் தலைவர் ஸ்டாலின். நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய முடியும்கண்டிப்பாக திமுகவால் அது முடியும்,சட்ட போராட்டம் நடத்தி மாணவர்களுக்காக தலைவர் ஸ்டாலின் நீட்டை ரத்து செய்வார். ஒன்பதரை ஆண்டுகளாக அமைச்சர்கள் ஊழல் செய்து வருகின்றனர்.

6000 கோடி ரோடு கான்ரேக்ட்டை தன் சம்பந்திக்கு கொடுத்து ஊழல் செய்து உள்ளார் எடப்பாடி – A2 சின்னம்மா வெளியே வர உள்ளார். எடப்பாடி தெருக்கோடிக்கு வர போகிறார். பாஜகவுடன் கூட்டணி யில் இருக்கக்கூடிய ஒரு கட்சி ராஷ்ட்ரிய லோக் சந்திரிகா என்று கட்சி அமைச்சரவையில் இருந்து விலகி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் 50 விவசாயிகள் இழந்துள்ளனர் எனவே நாங்கள் ராஜ ஹோமம் செய்கிறோம் என்று வெளியேறி விட்டனர். எடப்பாடி என்றும் படிப்படியாக வளர்ந்து வரவில்லை தவழ்ந்து தவழ்ந்து வந்தார் அதிலும் நாற்காலி மேஜை என்று ஒவ்வொன்றுக்கு.புகுந்து வந்தவர். ஆனால் இந்த அடிமைகள் பாஜகவுக்கு ஆதரவாக இருந்து நீட் தேர்வை உள்ளே நுழைய விட்டு போனதை தொடர்ந்து கொலை செய்கிறனர்.

அதற்கு உதாரணம் தான் அனிதா அந்த மாணவியின் மரணம் என்றும் அழியாத நினைவுகள் ஆக இருக்கிறது. மற்றொரு மாணவர் விக்னேஷ் அவருடைய வீட்டுக்கு நான் சென்ற போது தன்னுடைய கையை பிடித்து அவருடைய தந்தை இந்து நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்னால் செலவு செய்து தனித்தனி பயிற்சி கொடுத்து அனுப்ப முடியாது அதற்கான வசதி என்னிடம் இல்லை எனவே உங்களுடைய அப்பாவிடம் கூறி இதை ரத்து செய்ய முயற்சி எடுங்கள் என்று கூறினார்.

கண்டிப்பா திமுக தலைவர் ஒரு சட்டப் போராட்டத்தை நடத்தி நீட் தேர்வை கண்டிப்பாக ரத்து செய்வார். எஸ் பி வேலுமணி எல்இடி பல்பு வாங்குவதில் ஊழல் ஜெயக்குமார் வாக்கி டாக்கி வாங்குவதில் ஒரு ஊழல் எல்லாவற்றிலும் ஒரு ஊழல் ஊழல் பட்டியலில் கையில் வைத்துக்கொண்டுதான் பாஜக சிபிஐ வைத்து மிரட்டி வருகிறது. எனவே அவர்களுக்கு பயந்து தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் உள்ளே அனுமதித்து வருகின்றனர்.

1996இல் திருவரங்கத்தை வெற்றி பெற்றோம் மே மாதம் நடக்கக்கூடிய சட்டமன்ற தேர்தலில் இந்த திருவரங்கம் தொகுதியில் வெற்றி பெற செய்ய வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி எந்த தொகுதியில் நின்றாலும் நாம் தோற்கடிக்க வேண்டும். திமுக தலைவர் விரைவில் ஒரு வெற்றி கூட்டணியையும் வெற்றி வேட்பாளர்களையும் விரைவில் அறிவிப்பார் அவருடைய வாக்குறுதிகளுக்கு காத்திருங்கள் அவருடைய அறிவிப்பை செயல்படுத்துங்கள் என்று பேசினார்.

எந்த அதிமுக காரர்கள் இருந்தாலும் நீங்கள் கேட்க வேண்டிய முதல் கேள்வி உங்க புரட்சித்தலைவி அம்மா எப்படி இறந்தாங்க என்ற ஒரு கேள்வியை கேளுங்கள் அவர் ஓடி விடுவார். அந்த அம்மா உயிருடன் இருக்கும் போது எல்லா அமைச்சர்களும் நேரில் சென்று பதவி ஏற்கும் போது தேம்பித் தேம்பி அழுதவர்கள் அந்த அம்மா இறந்த பிறகு ஒருவர் கூட அழவில்லை.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஒரு கட்சியினுடைய தலைவர் அவருடைய இறப்பில் நிற்கக்கூடிய சந்தேகங்களை கேட்பதற்கு கூட அதிமுகவால் முடியவில்லை ஒரு அடிப்படை தொண்டனாள் கூட அதற்கான கேள்வி எழுப்ப முடியவில்லை. கோவில் பழுதடைந்து உள்ளது எனவே மறுசீரமைக்கவும், ஒரு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கோரிக்கை விடுத்தனர் இந்த கோரிக்கைகளை தலைவரிடம் முன்வைக்கிறேன் என்று கூறியுள்ளார்

Translate »
error: Content is protected !!