சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு… ஓடி ஓடி வேலை பார்த்த குஷ்புவுக்கு அதிர்ச்சி..! பா.ஜ.க.வுக்கு ஏமாற்றம்

சேப்பாக்கம்திருவல்லிக்கேணி தொகுதி பா...வுக்கு ஒதுக்கீடு: ஓடி ஓடி வேலை பார்த்த குஷ்புவுக்கு அதிர்ச்சி பா...வுக்கு ஏமாற்றம்..

.தி.மு.. கூட்டணியில் பா...வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் சென்னையில் உள்ளடங்கிய சேப்பாக்கம்திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி நிச்சயம் பா...வுக்கே ஒதுக்கப்படும் என்று அனைவராலும் எதிர்நோக்கப்பட்டது.

காரணம், அத்தொகுதியில் பா... பொறுப்பாளராக நடிகை குஷ்பு களமிறக்கப்பட்டது தான். இன்னும் சொல்லப்போனால் சேப்பாக்கம்திருவல்லிக்கேணி தொகுதியில் குஷ்பு தான் பா... வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

இதனாலேயே சேப்பாக்கம்திருவல்லிக்கேணி தொகுதியில் குஷ்பு மிகவும் கவனம் செலுத்தினார். தொகுதியில் தினந்தோறும் வீடு வீடாக சென்று பா...வுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார். மேளதாளம் வாசித்தும், பெண்களுடன் சகஜமாக நடனமாடியும் தினந்தோறும் அப்பகுதிவாசிகளின் கவனத்தை ஈர்த்து வந்தார்.

தொகுதிக்குட்பட்ட அண்ணாசாலையில் ஹைடெக் பாணியில் கண்டெய்னரில் தேர்தல் பணிமனை அமைத்தார். ‘நீங்கள் தான் வேட்பாளர்என்று அறுதியிட்டு கூறும் அளவுக்கு குஷ்புவின் செயல்பாடுகள் அமைந்தது. மேலும் தனக்குசீட்கொடுத்துவிட்டதாகவே நினைத்து நடிகை குஷ்பு ஓடி ஓடி உழைத்தார். சேப்பாக்கம்திருவல்லிக்கேணியில் சவாலான வேட்பாளராக குஷ்பு நிச்சயம் இருப்பார் என்று ஆரூடமும் கூறப்பட்டது

இந்தநிலையில் சேப்பாக்கம்திருவல்லிக்கேணி தொகுதியை பா...வுக்கு, .தி.மு.. அறிவித்திருக்கிறது. இது அத்தொகுதியை பெரிதும் எதிர்பார்த்திருந்த பா...வுக்கும், பம்பரம் போல சுழன்றி தேர்தல் பணியாற்றிய குஷ்புவுக்கும் பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது

Translate »
error: Content is protected !!