ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் பக்ரீத் வாழ்த்து

நபி இபுராஹிம் நபி அவர்கள் இறைவனுக்காக வாழ்வில் செய்த தியாகத்தை நினைவு கூரும் விதமாக உலக முஸ்லீம்கள் துல்ஹஜ் பிறை 10ம் நாளில் பக்ரீத் பண்டிகை என்னும் ஹஜ் பெருநாளை தியாகத் திருநாளாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். இன்று பக்ரீத் பண்டி நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பக்ரீத் பண்டிகை தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “சக குடிமக்கள் அனைவருக்கும் ஈத் முபாரக். ஈத்-உஸ்-ஜுஹா என்பது அன்பு மற்றும் தியாகத்தின் உணர்வை வெளிப்படுத்துவதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுவதற்கும் ஒரு திருவிழா ஆகும். கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், அனைவரின் மகிழ்ச்சிக்காகவும் செயல்படுவோம்” என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!