ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்; பொதுமக்கள் 7 பேர் காயம்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் 7 பேர் காயம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பேருந்து நிறுத்தத்தில் பாதுகாப்பு படையினர் இன்று காலை வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள், திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்களில் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின்  உடல்நிலை சீராக இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!