ஜம்மு காஷ்மீர், லடாக்கில் ஜனாதிபதி 4 நாள் சுற்றுப்பயணம்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று முதல் 28 ஆம் தேதி வரை காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு நான்கு நாள் பயணம் மேற்கொள்கிறார்.

இதற்காக இன்று புறப்பட்டு, கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் நாளை அவர் மரியாதை செலுத்துகிறார்.

ராம்நாத் கோவிந்த் 27 ஆம் தேதி ஸ்ரீநகரில் நடைபெறும் காஷ்மீர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். ஜனாதிபதியின் வருகையையொட்டி  காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய நாடுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Translate »
error: Content is protected !!