டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் தி.மு.க வினர் மாட்டு வண்டியுடன் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் – 1000 பேர் பங்கேற்பு.

மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் தொடர் போராட்டம் நடைப்பெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும்,மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் அந்த சட்டத்திற்கு துணை போகும் அ.தி.மு.க அரசை கண்டித்தும் தி.மு.க சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் மாட்டு வண்டியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்பாக கருப்பு கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து கருப்பு கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு தி.மு.க வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி வடக்கு,தெற்கு மற்றும் மத்திய மாவட்ட செயலாளர்கள்,சட்ட மன்ற உறுப்பினர்கள், தி.மு.க வின் பல்வேறு அணிகளை சேர்ந்த உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!