தமிழகத்தில் இன்று 1410 பேருக்கு கொரோனா: மருத்துவமனையில் இருந்து 1,456 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,410 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் இருந்து 1,456 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,410; சென்னையில் மட்டும் இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 385 ஆகும். இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 872 பேர். பெண்கள் 538 பேர்.

தமிழகத்தில் மொத்தம் கோவிட் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 4,72,430 பேர்; பெண்கள் 3,09,451 பேர்; மூன்றாம் பாலினத்தவர் 34 பேர். தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10,997 ஆகும்.

இன்று ஒருநாளில் மட்டும் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனை மாதிரி எண்ணிக்கை 62,616.மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,20,60,001 ஆகும்.

கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வந்து மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,456 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை, 7,59,206 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், உயிரிழப்பு எண்ணிக்கை 11,712 ஆக உள்ளது.

Translate »
error: Content is protected !!