திமுக, அமமுக உள்ளிட்ட பல கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் துணை முதல்வர் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.

பெரியகுளம் பல பகுதிகலில் இருந்து திமுக, அமமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளிலிருந்து விலகி  அதிமுகவில் துணை முதல்வர் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
 
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக முன்னாள் நகரச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மற்றும் திமுகவிலிருந்து 50க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில்  இணைந்தனர்.  அதிமுகவில் இணைந்த அனைவருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  கட்சி கரித்துண்டுகளை அணிவித்து வரவேற்றார்.  இதனைத் தொடர்ந்து பேசிய போது அமமுக,  திமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி வந்த அனைவருக்கும் அதிமுகவில் உரிய பதவி மற்றும் அங்கீகாரம்  அளிக்கப்படும் எனவும் அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என நம்பிக்கை தெரிவித்தார் நிகழ்ச்சியில் பெரியகுளம் நகர செயலாளர் இதில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் அதிமுக மாவட்டச் செயலாளர் சையதுகான் பெரியகுளம் ஒன்றிய செயலாளர்கள் அன்ன பிரகாஷ் செல்லமுத்து நகர செயலாளர் ராதா ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் யோகராஜன்மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்
Translate »
error: Content is protected !!