திருச்சி கிழக்கு தொகுதியின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கே.என். நேரு பேச்சு..!

கழக முதன்மைச் செயலாளர் கே என் நேரு திருச்சி தெற்கு மாவட்டம்  கிழக்கு தொகுதியின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டார்..

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு தொகுதியின் வேட்பாளர் அறிமுகம், மற்றும் செயல் வீரர்கள் கூட்டம். அதனை தொடர்ந்து தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.,

கிழக்கு தொகுதியின் வேட்பாளராக முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்களை அறிமுகம் செய்து கழக முதன்மை செயலாளர் கே என் நேரு அவர்கள் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து கிழக்கு தொகுதியின்  தேர்தல் அலுவலகத்தை திருச்சி பாலக்கரை பகுதியில்  கழக முதன்மைச் செயலாளர் கே என் நேரு திறந்து வைத்தார்.                       

கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என் சேகரன் பகுதி கழக செயலாளர்கள் மு. மதிவாணன். ஜி.ராஜசேகர். பாலமுருகன் கலந்து கொண்டனர் மதச்சார்பற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட மாநில பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.,

Translate »
error: Content is protected !!