தேசிய அளவில் டிரெண்டாகும் ResignModi ஹேஷ்டேக்..!   

கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்! சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று கேட்டு #ResignModi ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்தியர்கள் செய்த மிகப்பெரிய தவறு அவரை இரண்டாவது முறையாக பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுத்ததுதான். அவரை இரண்டாவது முறையாக பிரதமராக்க காரணமானவர்கள் அனைவரும் குற்றவாளிகள், தற்போதைய நெருக்கடிக்கு சரியான பதில் மோடி ராஜினாமா செய்வதுதான்.

கொரோனா முடிந்துவிட்டதாக நம்மை நம்ப வைத்த நரேந்திர மோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு வினியோகம் செய்ய ஆரம்பித்தார். ஆக்ஸிஜன், மருந்துகளை சேமித்து வைக்கவில்லை. இரண்டாவது அலைக்கு மோடி தயாராகவில்லை, உள்ளிட்ட கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!