தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களுக்கும் மத்தியபடை அனுப்பிவைப்பு – சுனில் அரோரா

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் பரப்புரை குறித்து புதிய அறிவிப்புகள்  வெளியிடப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையர் சுனில் அரோர இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்ளகளுக்கும் மத்திய படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

80 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தபால் மூல்ம வாக்களிக்கும் முறை ஒரு வாய்ப்பாகவே வழங்கப்படுகிறது.  தமிழக பேரவையின் பதவி காலம் மே24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. 5 மாநிலங்களிலும் மொத்தமாக 18 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றவர்கள் .தமிழகத்தில் 234 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது என சுனில் அரோரா அறிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் 88 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Translate »
error: Content is protected !!