பாகிஸ்தானில் திடீர் குண்டுவெடிப்பு.. 3 பேர் பலி.. 20 பேர் படுகாயம்..!

பாகிஸ்தானில் திடீர் குண்டுவெடிப்பு 3 பேர் பலியாகினர். 20 பேர் படுகாயம்.

லாகூர்,

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஜொகூர் டவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் திடீரென குண்டுவெடிப்பு நடந்ததில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட பலர் பலத்த படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்தை அறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேர் காயமடைந்துள்ளதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் மருத்துமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Translate »
error: Content is protected !!