பாஜகவை சார்ந்த ஹெச்.ராஜா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்

பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா குறித்து அவதூறாக பேசிய பாஜக வை சார்ந்த ஹெஜ்.ராஜா  உடனடியாக  குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது.

பாஜகவின் மூத்த தலைவர் ஹெஜ்.ராஜா சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெய்லர் ஜெயபிரகாஷை கொலை செய்தது இன்றைய பாபநாசம் எம்.எல். என்றும், ஜெயிலரின் மகன் தான்  இன்று பிரபல சினிமா நட்சத்திரம் சிவகார்த்திகேயன் என்றும் அவதூறான  கருத்தை தெரிவித்துள்ளார்.

பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரும் தமுமுக தலைவருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா மீதான தனது  வன்மத்தை தீர்த்துக்கொள்ள அவர் மீது பொய்யாக கொலைப்பழி சுமத்தியுள்ளார். இந்த மோசமான அவதூறுக்கு எதிராக தமுமுக சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதை அறிய முடிகிறது.

அமைதிப் பூங்காவான தமிழகத்தில் மத கலவரம் ஏற்பட வேண்டும் என்ற தீய  நோக்கத்துடன் ஹெச்.ராஜா பல ஆண்டுகளாகவே இது போன்று தாெடர்ந்து ஆணவத்துடன் பேசி வருகிறார். கடந்த காலங்களில்  நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டிருக்கிறார். நீதிமன்றத்தில் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். ஆனாலும் மீண்டும் மீண்டும் தவறான தகவல்களை பேட்டி என்கிற பெயரில் தெரிவித்து வருகிறார்.

எனவே சமூக அமைதிக்கு அச்சுறுத்தலாக திகழ்கின்ற பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த ஹெஜ்.ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட  வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

Translate »
error: Content is protected !!