பிப்ரவரி 14–ந் தேதி… பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை

சென்னை,

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் பிப்ரவரி 14–ந்தேதி காலை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண விவரங்கள் வெளியாகியுள்ளன.

14–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.50 மணிக்கு பிரதமர் மோடி டெல்லியிலிருந்து புறப்பட்டு காலை 10.35 மணிக்கு சென்னை வருகிறார். பிறகு சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சி 11.15 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்தும், மெட்ரோ ரெயில் திட்ட விரிவாக்கப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

அதன் பின்னர் 1.35 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு கேரள மாநிலம் கொச்சி செல்கிறார். அங்கு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் புதிய ஆலையை தொடங்கி வைக்கிறார்.

 

Translate »
error: Content is protected !!