பிரதமரின் வீட்டுக்கு முன் போராட முயன்ற காங்கிரஸ் தலைவர்.. போலீசார் தடுத்து நிறுத்தல்

டெல்லியில் கொரோனா தொற்றை தொடர்ந்து தற்போது கருப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வருகிறது.

புதுடெல்லி,

டெல்லியில் தற்போது கருப்பு பூஞ்சை  தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் இல்லை என கூறப்படுகிறது.

எனவே சிகிச்சைகாக போதிய மருத்துவர்களை ஏற்பாடு செய்யகோரி பிரதமரின் வீட்டுக்கு முன் போராட்டம் செய்ய டெல்லியை சேர்ந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.எல்..வுமான முகேஷ் சர்மா முயன்றார்.

வீட்டில் இருந்து போராட கிளம்பிய அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர் புகார் தெரிவித்த பின் வீட்டிலே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இன்னும் 48 மணி நேரத்திற்குள் சிகிச்சைக்காக மருத்துவர்களை ஏற்பாடு செய்ய வில்லை என்றால் பிரதமரின் வீட்டின் முன்பே போராடுவேன் என அவர் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!