புதுச்சேரியில் மாநில சட்டப்பேரவைக் கூட்டம் வரும் 16-ம் தேதி கூடுகிறது.
புதுச்சேரி,
புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் 15வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை மன்றத்தில் கூட்டப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளிட்ட செய்தி,
மாண்புமிகு துணைநிலை ஆளுநர் அவர்கள் புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை மன்றத்தில் கூட்டப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், மாண்புமிகு துணைநிலை ஆளுநர் அவர்கள் வரும் ஜூன் 16ஆம் தேதியை (புதன்கிழமை) புதுச்சேரி 15வது மாதம் சட்டப்பேரவையின் பேரவைத்தலைவருக்கான தேர்தல் நடத்தும் தேதியாக நிர்ணயித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகளின் விதி 9(2)-யின் கீழ், நியமனச்சீட்டுக்கள் வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி (செவ்வாய்கிழமை) நண்பகல் 12.00 மணி வரை, பேரவைச் செயலாளரால் பெற்றுக்கொள்ளப்படும். பேரவைச் நியமனச்சீட்டுக்களை செயலாளரிடம் பெற்றுக்கொள்ளலாம். நியமனச்சீட்டுக்களை அளிப்பதற்கான அறிவிப்பு ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது” என அதில் கூறியிருந்தது.