புதுடெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்ததில் 4 கார்கள் சேதம்

புதுடெல்லி

புதுடெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்ததில் 4 கார்கள் சேதமடைந்துள்ளன. இந்த குண்டுகள் குறைந்த சக்தி வாய்ந்தவை. ஒருவர் காயமடைந்தார்.

இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 150 மீட்டர் தொலைவில் அப்துல்கலாம் சாலையில் மாலை 5.05 மணிக்கு குண்டுவெடித்தது. எந்த மாதிரியான குண்டுவெடித்தது என தகவல் வெளியாகவில்லை. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று குண்டுவெடிப்பு எதிரொலியாக, அப்பகுதியில் உள்ள சாலைகள் மூடப்பட்டன. தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். சி.சி.டி.வி. காட்சிகள் ஆராயப்பட்டன. சம்பவம் நடந்த இடத்தில் பகுதியளவு எரிந்த நிலையில் கைக்குட்டை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இஸ்ரேல் தூதரக அதிகாரி க்கான முகவரியிட்டு கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில் உள்ள கைரேகை பதிவுகளை தடயவியல் குழு ஆய்வு செய்து வருகிறது. குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் டெல்லி, மும்பை, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர கண்காணிப்புடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி போலீசின் சிறப்பு படை பிரிவு இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகிறது. இதில், முதற்கட்ட தகவலின்படி, மக்களிடையே அச்சம் பரவுவதற்கான நோக்கில் தாக்குதல் நடந்துள்ளது. தூதரகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு அம்மோனியம் நைட்ரேட் என்ற ரசாயன பொருள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் குறைந்த அளவு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவே ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டு இருக்குமெனில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும். பெரிய சதி திட்டத்திற்கான சோதனையாக இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என டெல்லி போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பின்வாங்கல் விழா (மீட்டிங் ரீட்ரிட் செர்மனி) ஒரு சில கி.மீ. தொலைவில் நடந்து கொண்டிருந்தது. அதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி பங்கேற்றிருந்த சமயத்தில் இந்தக் குண்டு வெடித்தது.

 

Translate »
error: Content is protected !!