புயல் பாதிப்புகளுக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.286.91 கோடி நிதி ஒதிக்கீடு

புரெவி புயல் மற்றும் நிவர் புயல் பாதிப்புகளுக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.286.91 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

புதுடெல்லி,

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கூடுதல் வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு  ரூ.3,113 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி, மத்திய பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.3,113.05 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புரெவி புயல் மற்றும் நிவர் புயல் பாதிப்புகளுக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.286.91 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

தமிழகத்துக்கு நிவர் புயல் பாதிப்புக்காக ரூ.63.14 கோடியும், புரெவி புயல் பாதிப்புக்காக ரூ.223.77 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிவர் புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரிக்கு ரூ.9.91 கோடி நிதியையும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

அதிகபட்சமாக பீகார் மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.1,225.27 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Translate »
error: Content is protected !!