பெரியகுளத்தில்  கடைகளை அடைக்க கோரி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

வேளாண் திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய முழு பந்திற்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திறக்கப்பட்டிருந்த கடைகளை அடைக்க கோரி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக மாநில உயர்நிலை திட்டக்குழு உறுப்பினர் மூக்கையா மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், திமுக நகர செயலாளர் முரளி, ஒன்றிய செயலாளர் பாண்டியன் ஆகியோர் தலைமையில் கடைகளை அடைக்க வலியுறுத்தி சென்றனர். நிகழ்வில், திமுக நகர செயலாளர் முரளி, ஒன்றிய செயலாளர் பாண்டியன் விசி கட்சி சேர்ந்த கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம், பாராளுமன்ற செயலாளர் தமிழ்வாணன், மணிபாரதி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெரியகுளம் எம்.எல்.ஏ.சரவணக்குமார் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!