பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த நஷ்ட ஈடு வழக்கு: உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்

சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த நஷ்ட ஈடு வழக்கில், தி.மு.., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மணச்சநல்லூரில் நடந்த கூட்டத்தில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன்னை தொடர்பு படுத்தி பேசியதாகவும், இதனால் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக்கூறி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!